Wednesday 20 May 2009

‘வாழ்வைக் கொண்டாடுவோம், மரணத்தை அல்ல....’’

-பாவிசா

ஏதோவொரு மன ஆறுதலுடன் இப்படியும் எழுதத் தோன்றுகிறது.

மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்களுக்கான தீர்வு, தமிழீழ விடுதலை என ஆயுதம் ஏந்தி வன்முறையில் இறங்கி, தமிழ் சமூகத்தை நிர்வாணமாக்கி, முடமாக்கி விட்டு அழிந்துவிட்ட பிரபாகரன் என்ற ஒரு விசத்தூசிக்குடுமி இல்லாதுபோய்விட்டது. ஆனால், தமிழ் சமூகத்தில் இன்னும் ஒட்டுக்கொண்டிருக்கும் புலிகள் என்ற விசத்தூசி படலங்ளை அழிக்க இனியாவது நாம் பாடுபட வேண்டும். முடமாக்கப்பட்டிருக்கின்ற இந்த சந்ததியையும், எதிர்கால சந்ததியையும் கொண்ட தமிழ் சமூகத்தை மீளக்கட்டி எழுப்ப இனப்பிரச்சினைக்கு திடமான அரசியல் தீர்வை இலங்கை அரசிடமிருந்து பெற்றுக்கொண்டு, இனப்பாகுபாடுகளை களைந்து, பொருளாதார அடிப்படையில் இன நல்லுறவையும் கட்டியெழுப்ப வேண்டும்.

மற்றும் தமிழ்ச்சமூகத்திற்குள் அமுங்கிக்கிடந்த சாதி, வர்க்க, பிரதேசவாத தொற்றுகளை பகுத்தறிவுடன் அணுகி இல்லாமலாக்க, முற்போக்கு, இடதுசாரி, சோஷலிச தமிழ் குழுக்களின் ஒன்றிணைவுடன் நடைபெற வேண்டும்.

('வாழ்வைக் கொண்டாடுவோம், மரணத்தை அல்ல....'' –கேதீஸ் லோகநாதன்)

No comments: